மண்ணெண்ணெய்யின் விலையும் அதிகரிக்கிறது

Prabha Praneetha
2 years ago
 மண்ணெண்ணெய்யின் விலையும் அதிகரிக்கிறது

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

எரிசக்தி அமைச்சர் கஞ்சன  விஜேசேகர இது குறித்து அறிவித்துள்ளார். 

இதன்படி, எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் விலையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டிருந்தது. 

இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் 50/- ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 470/- ரூபாவாகும்.

95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாவாகும்.

இதேவேளை ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 60 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 460 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 520 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!