அமைச்சர் பதவியில் இருந்து விலக நிமல் சிறிபால நடவடிக்கை
Prathees
2 years ago

விமான ஒப்பந்தம் தொடர்பான விசாரணை முடியும் வரை அமைச்சர் பதவியில் இருந்து நிமல் சிறிபால விலகியுள்ளார்.
விமான போக்குவரத்து அமைச்சுக்கும் தனியார் நிறுவனத்துக்கும் இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று முன்தினம் (05) பாராளுமன்றத்தில் எழுப்பிய குற்றச்சாட்டு தொடர்பில் உடனடியாக முறையான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைகள் முடியும் வரை ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலக நிமல் சிறிபால டி சில்வா நடவடிக்கை எடுத்துள்ளார்.



