சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!
Prabha Praneetha
2 years ago
வெள்ளிக்கிழமைகளில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருளைப் வழங்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானம் அடுத்த 48 மணிநேரத்திற்குட்பட்ட காலத்தில் நடைமுறையில் இருக்காது என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் பெறுவதற்கான புதிய திகதி அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்த பிறகு புதிய திகதி அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.