கனடா சுமாா் 1.36 கோடி கோவிட் தடுப்பூசிகளை அகற்றுவதற்கு அந்த நாட்டு அரசு முடிவு

Kanimoli
4 years ago
கனடா சுமாா் 1.36 கோடி கோவிட் தடுப்பூசிகளை அகற்றுவதற்கு அந்த நாட்டு அரசு முடிவு

கனடாவிலுள்ள ஒக்ஸ்போா்ட்-அஸ்ட்ராஸெனேகா நிறுவனத்தின் சுமாா் 1.36 கோடி கோவிட் தடுப்பூசிகளை அகற்றுவதற்கு அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

அந்த மருந்துகளை பெற்றுக்கொள்ள உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் யாரும் முன்வராததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2 கோடி தடுப்பூசிகளை பெறுவதற்காக அஸ்ட்ராஸெனேகா நிறுவனத்துடன் கனடா அரசு கடந்த 2020-இல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

எனினும், அந்த தடுப்பூசிகளை செலுத்திகொண்டால் இரத்தக்கட்டு மரணம் நிகழக்கூடும் என்று அச்சத்தால், மற்ற நிறுவனங்களின் கோவிட் தடுப்பூசிகளின் மீது அரசு கவனம் செலுத்தியது. இதனால், அஸ்ட்ராஸெனேகா நிறுவன தடுப்பூசிகள் தேக்கமடைந்தமை குறிப்பிடத்தக்கது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4