தீயிட்டு எரிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் தற்போதைய நிலை
Kanimoli
2 years ago

கடந்த 9ஆம் திகதி தீயிட்டு எரிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் தற்போதைய நிலையை வெளிப்படுத்தும் காணொளிகள் வெளியாகியுள்ளது.
கொழும்பு – 03 5வது பாதையில் உள்ள பிரதமரின் பூர்வீக இல்லம் வன்முறை கும்பல் தீ வைத்து எரித்ததில் முற்றாக அழிந்துள்ளது.
அங்கு பிரதமரின் உத்தியோகபூர்வ குண்டு துளைக்காத வாகனமும், அரிய புத்தகங்கள் கொண்ட மதிப்புமிக்க நூலகமும் அழிக்கப்பட்டது.
மேலும், பிரதமரின் குடும்பத்தினருக்கு சொந்தமான அருகிலுள்ள பல வீடுகளும் கும்பலால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.



