ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறி சொந்த நாட்டிற்கு திரும்பிய 3மில்லியன் உக்ரைன் நாட்டு அகதிகள்

#Ukraine #Refugee
Prasu
2 years ago
ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறி சொந்த நாட்டிற்கு திரும்பிய 3மில்லியன் உக்ரைன் நாட்டு அகதிகள்

உக்ரைன் நாட்டு அகதிகள் மூன்று மில்லியன் பேர் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறி தங்கள் நாட்டிற்கு திரும்பி விட்டதாக ஐரோப்பிய ஆணையம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று போர் தொடுக்க தொடங்கியவுடன் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 மில்லியன் மக்கள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேறி அகதிகளாக அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி மற்றும் போலந்து போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்

உக்ரைனிருந்து வெளியேறிய அகதிகள் பலரும் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்திருந்த நிலையில் தற்போது மூன்று மில்லியன் அகதிகள் அந்நாடுகளிலிருந்து வெளியேறி தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பியுள்ளதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்திருக்கிறது எனினும் தற்போது சுமார் மூன்று புள்ளி ஏழு மில்லியன் உக்கரை நகரில் ஐரோப்பிய நாடுகளில் உள்ளார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது