இலங்கை மக்களுக்கு மாலைதீவு சபாநாயகர் வாழ்த்து

Kanimoli
2 years ago
 இலங்கை மக்களுக்கு மாலைதீவு சபாநாயகர் வாழ்த்து

தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்,மாலைதீவு சபாநாயகர் நஷீத் மொஹமட் இலங்கை மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றினையிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச பதவி விலகலை தொடர்ந்து இலங்கை இப்போது முன்னேற முடியும் என்று நம்புகிறேன். ஜனாதிபதி இன்னும் இலங்கையில் இருந்திருந்தால் உயிருக்கு பயந்து பதவி விலகலை செய்திருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன்.

மாலைதீவு அரசின் சிந்தனைமிக்க செயலை நான் பாராட்டுகிறேன். இலங்கை மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்” என்றும் மாலைதீவு சபாநாயகர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.