இந்திய கடன் வரியின் கீழ் யூரியா வருகிறது
Prabha Praneetha
2 years ago
இந்திய கடன் வரியின் கீழ் நாற்பத்தாறாயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரம் அண்மையில் இலங்கையை வந்தடைந்தது.
நேற்று கொழும்பில் உள்ள அரச களஞ்சியசாலைகளுக்கு இந்த சரக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தினால் விதிக்கப்பட்ட தடைக்கு பின்னர் இலங்கைக்கு உரத்தொகுதி ஒன்று வந்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.