புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி தீர்மானம்
Prathees
2 years ago
தற்போதுள்ள ஆளுநர்களுக்கு பதிலாக புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, தற்போதைய ஆளுநர்கள் பலர் இன்னும் சில நாட்களில் பதவி விலக உள்ளனர்.
தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே ஏற்கனவே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு நெருக்கமானவர்கள் பலர் புதிய ஆளுநர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.