பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமரிடம் கோரிக்கை

Prabha Praneetha
2 years ago
பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமரிடம் கோரிக்கை

காலியில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்தில் தங்கியிருந்த ஆர்ப்பாட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் நடத்தப்பட்ட விதம் ஜனநாயகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

இதனால் இந்த நாட்டின் பிம்பத்திற்கு பாதகமான பாதிப்பு ஏற்படும் என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமை குறித்து விவாதிப்பதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை  பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.