முதல் தடவையாக அரண்மையில் காட்சிப்படுத்தப்பட்ட மகாராணியின் நகைகள்
Prasu
2 years ago
பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத்தின் நகைகளை முதல் தடவையாக பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
பிரிட்டன் மகாராணியின் 96-ஆவது பிறந்த நாள் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்பட்டது. நாட்டின் அரச குடும்பத்தின் வரலாற்றிலேயே சுமார் 70 வருடங்களாக ஆட்சி புரிந்த முதல் மகாராணி என்ற பெருமை அவருக்கு கிடைத்திருக்கிறது. எனவே, இதை கொண்டாடுவதற்காக அரச குடும்பத்தினர் பல கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.
அதன் ஒரு பகுதியாக, நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த புகைப்படங்கள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றது. அந்த அரண்மனையில் அரச குடும்பத்தினர் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்படும். ஆனால், முதல் தடவையாக மகாராணியின் நகைகள், மக்கள் பார்வைக்காக அங்கு வைக்கப்பட்டிருக்கிறது.