கொடிகாமம் நகர்ப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த சகோதரர்கள் கைது

Kanimoli
2 years ago
 கொடிகாமம் நகர்ப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த சகோதரர்கள்  கைது

கொடிகாமம் நகர்ப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இரு சகோதரர்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டு கொடிகாமப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் கச்சாய் வீதிப் பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 24 வயதுடைய சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது கைதான நபர்களிடம் இருந்து 210 மில்லிக்கிராம் நிறை கொண்ட மூன்று சிறிய ஹெரோயின் பொதிகள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.