எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து
Prathees
2 years ago
பண்டாரகம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்களின் ஓய்வறையில் தீ விபத்து ஏற்பட்டது.
வரிசையில் நின்றிருந்த எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீயை முழுமையாக அணைத்தனர்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.