முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் எரிசக்தி அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை
Prabha Praneetha
2 years ago
வாரத்திற்கு 06 நாட்களுக்கு தினமும் 5 அல்லது 6 லீற்றர் எரிபொருளை வழங்குமாறு அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் எரிசக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கண்டியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அச்சங்கத்தின் ஊடக செயலாளர் கபில கலபிடகே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
தொடரும் எரிபொருள் பிரச்சினை காரணமாக முச்சக்கரவண்டி தொழில் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.