குரங்கு அம்மையால் முதல் மரணம் பதிவு

Mayoorikka
2 years ago
குரங்கு அம்மையால் முதல் மரணம் பதிவு

இந்தியாவில் மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோயால் முதலாவது உயிர் பறிபோயுள்ளது.

இதில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கேரளாவின் - திருச்சூர் பகுதிக்கு பிரவேசித்திருந்த 22 வயதான இளைஞர் நோய் அறிகுறிகள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனையில் அவருக்கு குரங்கு அம்மை தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கேரள சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.