கோட்டாபய நாடு திரும்புவதற்கு உகந்த நேரமல்ல: ரணில்
Mayoorikka
2 years ago
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும், இது அரசியல் பதட்டங்களை தூண்டும் எனவும் வோல் ஸ்ட்ரீட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
“அவர் திரும்பி வருவதற்கான நேரம் இது என்று நான் நம்பவில்லை,” என்று விக்கிரமசிங்க அந்த ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார். “அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் தன்னிடம் இல்லை.” என்றார்
கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 13 அன்று தப்பியோடி தனது பதவியில் இருந்து விலகினார்.