நான் அப்படி கூறவே இல்லை - மஹிந்த அமரவீர

Kanimoli
2 years ago
நான் அப்படி கூறவே இல்லை - மஹிந்த அமரவீர

அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார பார்வை சிறப்பானது என்றோ அல்லது மஹிந்த ராஜபக்ஷ உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்றோ தான் கூறவில்லை என விவசாய, வனவிலங்கு மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியாகும் ஊடக அறிக்கைகள் குறித்து தாம் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மகிந்த ராஜபக்சவின் அனுபவமும் பெறப்பட வேண்டும் எனவும், நாட்டில் உள்ள அனைவரினதும் ஆதரவில் அதிபர் செயற்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் கடந்த (30) ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீலங்கா தேசியக் கட்சியின் மாவட்டப் பிரிவு அமைப்பாளர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மோசமான உடல்நிலையை கருத்தில் கொண்டு, மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெறும் நேரம் இது என அவர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.