சட்டவிரோதமான முறையில் டீசல் விற்பனை : பௌசர் சாரதி உட்பட 4 பேர் கைது

Mayoorikka
2 years ago
சட்டவிரோதமான முறையில் டீசல் விற்பனை : பௌசர் சாரதி உட்பட 4 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு டீசல் தொகையொன்றை விற்பனை செய்ய முற்பட்ட எரிபொருள் பௌசர் சாரதி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

6,600 லீற்றர் டீசலுடன் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் ஒரு லீற்றர் டீசலை 900 ரூபாவுக்கு விற்பனை முயற்சித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பௌசர் சாரதி, உதவியாளர் உட்பட நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.