மீண்டும் இவ்வாறான ஒரு நெருக்கடி ஏற்படாமல் இருக்க பணியாற்றுவோம்: உரையில் ஜனாதிபதி

Mayoorikka
2 years ago
மீண்டும் இவ்வாறான ஒரு நெருக்கடி ஏற்படாமல் இருக்க பணியாற்றுவோம்:  உரையில் ஜனாதிபதி

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்காக சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கு அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

9ஆவது நாடாளுமன்றின் மூன்றாவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி தனது கொள்கை உரையிலேயே நிகழ்த்தும் போதே இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கரத்து வெளியிட்ட அவர், இலங்கை இக்கட்டான நிலையில் இருக்கும் போது இந்தியா வழங்கி உதவியையும் ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்தார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கைக்கு உயர்மூச்சு வழங்கிய இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி தனது கொள்கை உரையின் போது குறிப்பிட்டார்.