14 வயது சிறுமி ஒருவரைக் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
Kanimoli
2 years ago
லுணுகலை 27 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரைக் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவியின் பெற்றோர் நேற்றைய தினம் தமது கடைக்குச் சென்று, சுமார் 3 மணி நேரத்தின் பின்னர் அளவில் வீடு சென்று பார்த்த போது சிறுமி வீட்டில் இருக்கவில்லை என கூறப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து சிறுமியை தேடும் நடவடிக்கையில் லுணுகலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.