காலிமுகத்திடலில் இருந்து வெளியேறும் போராட்டகாரர்கள்

Kanimoli
2 years ago
காலிமுகத்திடலில் இருந்து வெளியேறும் போராட்டகாரர்கள்

காலிமுகத்திடல் போராட்ட தளத்திலிருந்து போராட்டகாரர்களை வெளியேறுமாறு காவல்துறையினர் விடுத்த அறிவிப்பை அடுத்து போராட்டக்காரர்கள் கூடாரங்களை அகற்றி வருகின்றனர்.

நாளை (5) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு முன்னதாக காலிமுகத்திடல் போராட்ட தளத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் அறிவித்திருந்தனர். நேற்றையதினம் காலிமுகத்திடலுக்கு சென்ற காவல்துறையினர் இன்றையதினமும் சென்றிருந்தனர்.

காவல்துறையினரின் அறிவிப்பை அடுத்து கூடாரங்களை அகற்றும் பணி நேற்று இரவும் இன்றும் மேற்கொள்ளப்பட்டதுடன், இன்று பிற்பகல் சில கூடாரங்களை அகற்றும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, இது வரை போராட்ட பகுதியில் தங்கி முதலுதவி அளித்து வந்த புனித ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை ஊழியர்களும் இன்று பிற்பகல் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இதனிடையே போராட்டக்காரர்களை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதை தடுக்குமாறு கோரி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது