கொழும்பு கோட்டை மற்றும் பதுளைக்கு இடையிலான கடுகதி ரயில்கள் சில ரத்து
Prabha Praneetha
2 years ago
உடரட ரயில் வீதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் பதுளைக்கு இடையிலான கடுகதி ரயில்கள் சிலவற்றை ரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிக மழை காரணமாக உடரட ரயில் வீதியின் நாவலப்பிடிய மற்றும் ஹட்டன் ரயில் நிலையங்களுக்கு இடையில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் இவ்வாறு ரயில்கள் ரத்துச் செய்யப்படுவதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளார்.