வவுனியா, சேமமடு கிராமத்தில் யானை தாக்கி முதியவர் ஒருவர் பலி

#Elephant #Attack #Death
Prasu
2 years ago
வவுனியா, சேமமடு கிராமத்தில் யானை தாக்கி முதியவர் ஒருவர் பலி

வவுனியா, சேமமடு கிராமத்தில் யானை தாக்கி முதியவர் ஒருவர் இன்று  மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது, காடு நோக்கி சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, வீதியின் குறுக்கே நின்ற யானை அவரை தாக்கியுள்ளது. 

சம்பவ இடத்திலேயே முதியவர் மரணமடைந்துள்ளார். வீதியால் சென்றவர்கள் அதனை அவதானித்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.