முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இன்னும் 2 வாரங்களுக்கு சிங்கப்பூரில்!

Prathees
3 years ago
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இன்னும் 2 வாரங்களுக்கு சிங்கப்பூரில்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேலும் இரண்டு வாரங்களுக்கு சிங்கப்பூரில் தங்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜூலை 14ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் வந்தடைந்த போது, ​​முன்னாள் ஜனாதிபதிக்கு 14 நாள் பயண அனுமதி வழங்கப்பட்டு இரண்டு வாரங்கள் அங்கு தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மேலும் 14 நாட்களுக்கு சிங்கப்பூரில் தங்குவதற்கு அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கம் சிங்கப்பூர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள அவரது விசா ஆகஸ்ட் 11ஆம் திகதியுடன் காலாவதியாகும் என்றும், அதன் பிறகு அவர் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கோட்டாபய ராஜபக்ச சில காலம் சிங்கப்பூரில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமறைவாகவில்லை எனவும் அவர் சிங்கப்பூரில் இருந்து இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் முன்னாள் ஜனாதிபதி இலங்கை திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு தமது நாட்டில் விசேட சலுகையோ, விலக்குரிமையோ கிடையாது என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4