பஸ் தரிப்பிடத்தில் உயிரிழந்துள்ள சடலத்தை பொறுப்பேற்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

Kanimoli
2 years ago
பஸ் தரிப்பிடத்தில் உயிரிழந்துள்ள சடலத்தை பொறுப்பேற்குமாறு  பொலிஸார் வேண்டுகோள்

    மஸ்கெலியா- லக்கம்பே கடை வீதிக்கு அருகிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் சுகயீனமுற்ற ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உறவினர்கள் சடலத்தை பொறுப்பேற்குமாறு மஸ்கெலியா பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உயிரிழந்தவர் 75 வயது மதிக்கத்தக்க அங்கமுத்து சிங்காரவேல் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இவர், வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது, நீல நிற நீள சட்டையும் நீல நிற சாரமும் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் 1980- 85ஆம் ஆண்டு வரை அவரது மகனுடன் லக்கம்பே பகுதியில் வாழ்ந்து வந்துள்ள நிலையில், இருவரும் பின்னர் அப்பிரதேசத்தை விட்டு சென்றுள்ள்ளார்.

அத்துடன், உயிரிழந்தவரின் மனைவி ஒரு ஆசிரியை என்றும் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவரது சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

    உயிரிழந்தவரின் உறவினர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆரியரத்னவின் கைபேசி இலக்கமான 0718591126 அல்லது 052-2277222 இலக்கத்துக்கோ தகவல்களை வழங்குமாறும் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.