அர்ஜுன ரணதுங்கவிடம் இரண்டு பில்லியன் இழப்பீடு கோரும் கிரிக்கெட் அமைப்பு

Prathees
2 years ago
அர்ஜுன ரணதுங்கவிடம் இரண்டு பில்லியன் இழப்பீடு கோரும் கிரிக்கெட் அமைப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கவிடம் 2 பில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளன.

இன்று நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின் செயற்குழு கூட்டத்தில் அந்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

அர்ஜுன ரணதுங்க சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்

கிரிக்கெட் செயற்குழு மீது தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.