மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் 19 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்

Kanimoli
3 years ago
 மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் 19 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்

  மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் பிலியந்தலை, கோரக்காபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இதன்போது படுகாயமடைந்த மற்றுமொரு இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். பொகுந்தர பிரதேசத்தில் உள்ள வீதியொன்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபடச் சென்ற போதே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது.

பந்தயத்திற்கு சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஒன்று தற்போது காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மற்றைய மோட்டார் சைக்கிளை பொகுந்தர பிரதேசத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்தும் கடையொன்றில் வைத்து பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும், விபத்து இடம்பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், உயிரிழந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதுடன், விபத்து இடம்பெற்ற போது பல காட்சிகள் கைத்தொலைபேசியில் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4