நான்சிபெலோசி வருகைக்கு பிறகு தைவான் நாட்டின் மூத்த அதிகாரிகளான 7 நபர்களுக்கு பொருளாதாரத் தடை விதித்த சீனா

#China #Thaiwan
Prasu
3 years ago
நான்சிபெலோசி வருகைக்கு பிறகு தைவான் நாட்டின் மூத்த அதிகாரிகளான 7 நபர்களுக்கு பொருளாதாரத் தடை விதித்த சீனா

தைவான் நாட்டிற்கு அமெரிக்க சபாநாயகர் நான்சிபெலோசி சென்றதால் சீனாவானது ஆத்திரமடைந்தது. இதையடுத்து சீன இராணுவம் தைவானை சுற்றிவளைத்து கடல் மற்றும் வான்வெளியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது.

இதன் காரணமாக ஏற்பட்ட பதற்றம் தணிவதற்குள் அமெரிக்காவின் எம்.பி-க்கள் 5 பேர் இரண்டு நாள் பயணமாக சென்ற ஞாயிற்றுக்கிழமை தைவான்நாட்டிற்கு சென்றனர். இது சீனாவை மேலும் கோபமடைய செய்தது.

இதனால் சீன ராணுவம் மீண்டுமாக தைவானை சுற்றிலும் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் எம்பி-க்களின் வருகைக்கு பதிலடி கொடுக்க தைவான்நாட்டின் மூத்த அதிகாரிகளான 7 நபர்களுக்கு பொருளாதாரத் தடைகளை சீனாவானது விதித்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4