8 அடி உயரமான காட்டு யானையை கொன்ற பெண்ணொருவர் கைது

Prathees
2 years ago
8 அடி  உயரமான காட்டு யானையை கொன்ற பெண்ணொருவர் கைது

வவுனியா கணேசபுரம் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த காட்டு யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் உத்தியோகத்தர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கணேசபுரம் பகுதியில் உள்ள தனியார் காணிக்கு வந்த குறித்த யானை கடந்த 16ஆம் திகதி இரவு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

இன்று காலை யானை படுத்திருப்பதைக் கண்ட பிரதேசவாசி ஒருவர் வவுனியா வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

வனஜீவராசிகள் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ​​காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும், மின்சாரம் தாக்கிய மின்சார வயர்களை சந்தேகநபர்கள் அறுத்தெறிந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எனினும் யானை கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா வனஜீவராசிகள் அதிகாரிகளும் பொலிஸாரும் யானை உயிரிழந்த காணிக்கு சொந்தமான 45 வயதுடைய பெண்ணை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உயிரிழந்த யானை சுமார் 08 அடி உயரம் கொண்ட 25 வயதுடையவர் எனவும் கைது செய்யப்பட்ட நபர் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்த காட்டு யானையின் இறுதிக் கிரியைகள் உள்ளூர் கிராம ஊழியர் காரியாலயத்திற்கு அறிவிக்கப்பட்டு இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் உத்தியோகத்தர் அலுவலகம் தெரிவித்துள்ளது.