திடீரென இரத்து செய்யப்பட்ட இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவின் முக்கிய சந்திப்பு!

Mayoorikka
3 years ago
திடீரென இரத்து செய்யப்பட்ட இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவின் முக்கிய சந்திப்பு!

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று (27) கண்டிக்கு விஜயமொன்றை மேற்கொள்ள  தீர்மானித்திருந்த நிலையில், திடீரென இந்த விஜயம்  இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

சீனத் தூதுவர் நேற்று மாலை 4.30 மணியளவில் மல்வத்து- அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்திருந்த நிலையில், நேற்று மாலை 3.30 மணிக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் மல்வத்து- அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்கு தீர்மானித்திருந்தார்.

எனினும் இறுதி நேரத்தில் அச்சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில், கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரிடம் வினவியபோது, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே திடீர் சுகயீனமடைந்ததால், இச்சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4