ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத கும்பலை சேர்ந்த ஒருவரை ரஷ்ய பாதுகாப்புத்துறை கைது செய்துள்ளது

Kanimoli
3 years ago
ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத கும்பலை சேர்ந்த ஒருவரை ரஷ்ய பாதுகாப்புத்துறை கைது செய்துள்ளது

ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத கும்பலை சேர்ந்த ஒருவரை ரஷ்ய பாதுகாப்புத்துறை கைது செய்துள்ளது.

மத்திய ஆசியா பகுதியை சேர்ந்த குறித்த தீவிரவாதி இந்தியாவின் ஆளுங்கட்சி தலைவர் ஒருவரை, மனித வெடிகுண்டாக மாறி கொலை செய்ய திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஐ.எஸ் ஐ.எஸ் தலைவர் ஒருவரால் துருக்கி நாட்டில் தற்கொலைப்படை நபராக இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர் என தெரியவந்தது.

மேலும் இந்த ஆட்சேர்கை நடவடிக்கை டெலிகிராம் மூலமாகவும் பின்னர் இஸ்தான்புலில் சில சந்திப்புகள் மூலமாகவும் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.

ரஷ்யாவிற்கு சென்று இந்தியாவிற்கு செல்ல தேவையான ஆவணங்களை பெற்று, இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கை மேற்கொள்ளவதே பிடிப்பட்ட பயங்கரவாதிக்கு கொடுக்கப்பட்ட வேலை என விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மேலும் இது குறித்து ரஷ்ய பாதுகாப்புதுறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4