அரச உத்தியோகத்தர்களின் விடுமுறை; அரசு வௌியிட்டுள்ள புதிய சுற்றறிக்கை
Mayoorikka
2 years ago
கொரோனா காலத்தில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட நிவாரணத் திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களின் விடுமுறையைக் கணக்கிடுவதற்கான வழிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இராஜாங்க, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில், பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பணிப்புரையின் பேரில் இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
தற்போது அரச சேவையை வழமை போன்று நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அரச அதிகாரிகளின் விடுமுறை வழமையான நடைமுறைகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.