நாட்டில் பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரிப்பினை பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது

Kanimoli
2 years ago
நாட்டில் பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரிப்பினை பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது

நாட்டில் பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரிப்பினை பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் வெளியிப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி ஆகஸ்ட் மாத பணவீக்கம் 64.3 வீதமாக உயர்வடைந்துள்ளது.

கடந்த ஜுலை மாதம் பணவீக்கம் 60.8 வீதமாக காணப்பட்டுள்ளது.

உணவு பணவீக்கம்
இதேவேளை, உணவு பணவீக்கம் கடந்த ஜுலை மாதம் 90.9 வீதமாக காணப்பட்டதுடன், இந்த மாதம் அது 93.7 வீதமாக உயர்வடைந்துள்ளது.