பெரிய நெல் ஆலை உரிமையாளரின் லாபம் குறித்து மஹிந்தானந்த வெளியிட்ட தகவல்

Prathees
2 years ago
பெரிய நெல் ஆலை உரிமையாளரின்  லாபம் குறித்து மஹிந்தானந்த வெளியிட்ட தகவல்

இலங்கையில் பாரிய அரிசி ஆலை உரிமையாளர் ஒருவரின் இலாபம் நூறு பில்லியன் ரூபா என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிடுகின்றார்.

அதன்படி, வருடத்தின் இரண்டு பருவங்களிலும் தனது இலாபம் நூறு பில்லியன் ரூபாவாகும் என அவர் தெரிவித்தார்.

ஆனால் அவர் சுமார் 900,000 ரூபா வருமான வரி செலுத்துவதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நாட்டில் நான்கு பாரிய ஆலை உரிமையாளர்கள் இவ்வாறு பணம் சம்பாதிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.