அவசர உதவியாக 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி!

Mayoorikka
2 years ago
அவசர உதவியாக 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க  ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி!

இலங்கைக்கான அவசர உதவியாக 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், வறுமையில் வாடும் மக்களுக்கு – குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த கடன் உதவி வழங்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த கடன் உதவிக்காக திருப்பி அனுப்பியுள்ளது.