போராட்டத்தில் ஈடுபட்ட 80 தொழிலதிபர்கள் நாட்டை விட்டு தப்பியோட்டம்

Prathees
2 years ago
போராட்டத்தில் ஈடுபட்ட 80 தொழிலதிபர்கள் நாட்டை விட்டு தப்பியோட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட முன்னணி வர்த்தகர்கள் உட்பட கிட்டத்தட்ட எண்பது பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குழுவினர் தொடர்பில் பாதுகாப்புப் படையினர் இரகசிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவர்களைக் கைது செய்ய சர்வதேச பாதுகாப்புப் படையினரின் ஆதரவைப் பெற்று வருகின்றனர்.

இந்தக் குழுவினர் தொடர்பில் பாதுகாப்புப் படையினர் இரகசிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவர்களைக் கைது செய்ய சர்வதேச பாதுகாப்புப் படையினரின் ஆதரவைப் பெற்று வருகின்றனர்.

இவர்களில் சிலர் தங்களுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தூதரகங்களில் தவறான தகவல்களை சமர்ப்பித்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஜனாதிபதி அலுவலகத்துக்குள் நுழைந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட பிரபல கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் ஆப்பிரிக்காவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கிட்டத்தட்ட இருநூறு பேர் வெளிநாடு செல்வதற்காக தூதரகங்களில் தஞ்சம் கோரியுள்ளனர்.