நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது

#SriLanka #Arrest
Prasu
2 years ago
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர்  கைது

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருவேறு பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட மூவர்  குற்றத்தடுப்பு பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் 22, 32  மற்றும் 28 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் இரத்மலானை மற்றும் வாதுவை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

சந்தேகநபர்களிடமிருந்த தங்க ஆபரணங்கள், தொலைபேசிகள் மற்றும் 30,000 பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

சந்தேகநபர்களை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தபடவுள்ளதோடு சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்

கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட  இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் அவர்கள் கம்பஹா, ராகம, மற்றும் கனேமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 24 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.