30 வருட யுத்தத்திற்கு வழிவகுத்து 60,000 பேரை கொன்று குவித்தவரின் மகனே சஜித் - பிரசன்ன ரணதுங்க

#Sajith Premadasa
Prasu
2 years ago
30 வருட யுத்தத்திற்கு வழிவகுத்து 60,000 பேரை கொன்று குவித்தவரின் மகனே சஜித் - பிரசன்ன ரணதுங்க

தமிழர்களின் வீடுகளையும், சொத்துக்களையும் எரித்து 30 வருட யுத்தத்திற்கு வழி வகுத்தவரும், 60000 இளைஞர்களை கொன்று குவித்தவரும் தனது தந்தை பிரேமதாச என்பதனை மறந்து அடக்குமுறைகளைப் பற்றி அவரது மகனான சஜித் பிரேமதாச அதிகமாகவே பேசுவதாக அரச தரப்பு பிரதம கொறடாவும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதற்கெடுத்தாலும் ராஜபக்ச குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டும் எதிர்க்கட்சியினர் உக்ரைன் யுத்தத்தால் இதைவிட மோசமான பொருளாதார நிலைமையை எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரும் போதும் அதற்கும் ராஜபக்சர்கள் மீது தான் பழிபோடுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.