தைவானுக்கு 8,700 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை விற்பதாக அறிவித்த அமெரிக்க அரசு
தைவானுக்கு போர் கப்பல்கள் மற்றும் விமானங்களை தாங்கி அளிக்கவல்ல ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்து இருக்கின்றது.
இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி கடந்த மாதம் சீனாவின் எதிர்ப்பையும் தாண்டி தைவானுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதனை அடுத்து தைவானை மிரட்டும் விதமாக அந்த நாட்டின் எல்லையில் தீவிர போர் பயிற்சிகளை சீனா மேற்கொண்டுதால் பெரும் பதற்றம் உருவானது.
இதனால் சீனாவை எதிர்க்கும் விதமாக ஆயுதங்களை வாங்கி குவிக்க தைவான் திட்டமிட்டு இருப்பதால் பாதுகாப்பு துறைக்கு சுமார் ஒரு லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்திருந்தது.
இந்த சூழலில் சீனாவின் எதிர்ப்புகளை மீறி அமெரிக்கா தைவானுக்கு ராணுவ ஆயுதங்களை விற்பனை செய்வதாக அறிவித்திருக்கின்றது.
அதன்படி அமெரிக்க அரசு தைவானுக்கு போர் விமானங்களுக்கான ஏவுகணைகள் உள்ளிட்ட 8,700 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை விற்பதாக அறிவித்துள்ளது.
மேலும் போர்க்கப்பல்களை தாக்கி அளிக்க கூடிய 60 ஹார்பன் பிளாக் வகை ஏவுகணைகள் எதிரி ஏவினைகளை நடு வானில் மறித்து தாக்கிய அளிக்கும் 100 ஏவுகணைகள் தைவானுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் ரேடார் கண்காணிப்பு விரிவாக அமைப்பையும் கைவானுக்கு விற்பனை செய்வதாக அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் சீனாவில் இருந்து எல்லை தாண்டி நுழைந்த ட்ரோன் விமானம் ஒன்று துப்பாக்கி சூடு நடத்தி விரட்டி அடிக்கப்பட்டதாக தைவான் ராணுவம் கூறியுள்ளது.