பாரியதொரு அமைச்சரவை பட்டாளத்தை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்

Kanimoli
2 years ago
பாரியதொரு அமைச்சரவை பட்டாளத்தை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்

பாரியதொரு அமைச்சரவை பட்டாளத்தை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி எஞ்சியுள்ள அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்க அதிபர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதுள்ள 18 அமைச்சரவை அமைச்சர்களுடன் 40 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்க அதிபர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

35 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்படி, மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 75 ஆக உயரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.