செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞன் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம்
Prathees
2 years ago
ஹல்துமுல்ல, உடவேரியவத்தை, சன்வெலி தோட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
குருத்தலாவ, வெலமிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் தனது நண்பருடன் அருவியை பார்வையிட வந்துள்ளார்.
அங்கு புகைப்படம் எடுக்க முற்பட்ட போது அவர் அருவியில் தவறி விழுந்து அந்த இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் கீழே உள்ள நீர்வீழ்ச்சியில் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஹல்துமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.