பாகிஸ்தானில் மழை மற்றும் பாரிய வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,265 ஆக உயர்வு

#Pakistan #Flood #Death
Prasu
2 years ago
பாகிஸ்தானில் மழை மற்றும் பாரிய வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,265 ஆக உயர்வு

பாகிஸ்தானில் பலத்த மழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பருவமழை கொட்டி வருகிறது. 

லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். 3.3 கோடி மக்கள் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் பாகிஸ்தானில் மழை வெள்ளத்துக்கு மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால் பலி எண்ணிக்கை 1,265 ஆக உயர்ந்துள்ளது. இதில் 441 குழந்தைகள் அடங்குவர். வெள்ள மீட்புப் பணிகளில் ராணுவம், கடற்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.