உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

Mayoorikka
2 years ago
உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த பரீட்சைகள் டிசம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 04ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், டிசெம்பர் 05 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சைகள் 2023 ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.