போராட்டத்தை மறந்தவர்களுக்கு அரசியல் பயணம் இல்லை - சந்திரிகா

Prathees
2 years ago
போராட்டத்தை மறந்தவர்களுக்கு அரசியல் பயணம் இல்லை - சந்திரிகா

நாட்டில் 04 மாதங்களாக இடம்பெற்று வரும் மக்கள் போராட்டத்தை மறந்து வெற்றிகரமான அரசியலில் எவராலும் ஈடுபட முடியாது என திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டை கட்டியெழுப்பும் நேர்மையான வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.