கிளிநொச்சி- பளை பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட கிளாலி பகுதியில் இன்று அதிகாலை 37கிலோ 700கிராம் கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது
Kanimoli
2 years ago
கிளிநொச்சி- பளை பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட கிளாலி பகுதியில் இன்று அதிகாலை 37கிலோ 700கிராம் கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் கைதான சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவும் பளை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் கைதான சந்தேக நபர்களையும் கஞ்சா பொதிகளையும் நீதிமன்ற நடவடிக்கைக்கு முற்படுத்த நடவடிக்ககள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.