IMF நிபந்தனைகளால் உள்நாட்டுக் கடன் அபாயத்தில் உள்ளது..:மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்
Prathees
2 years ago
இலங்கையின் கடனில் இருந்து வெளிநாட்டுக் கடன்களை மாத்திரம் மறுசீரமைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டவில்லை எனவும்இ இதன் காரணமாக உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு அபாயம் ஏற்படலாம் எனவும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ. ஏ. விஜேவர்தன குறிப்பிடுகின்றார்.
சீனா உலக நாடுகளுக்கு சுமார் 1000 பில்லியன் டொலர் கடனை வழங்கியுள்ளதாகவும், எனவே இலங்கையின் கடனைத் துண்டித்தால், அந்தக் கடனையும் துண்டிக்க சீனாவின் செல்வாக்கு செலுத்த முடியும் எனவும் அவர் கூறுகிறார்.
இதன் காரணமாக இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் சீனா எவ்வாறு செயற்படும் என்ற கேள்வி இன்னும் உள்ளது என கலாநிதி விஜேவர்தன தெரிவித்துள்ளார்.