சிங்கள நடிகை தமித்தா அபேரத்னவுக்கு விளக்கமறியல்

Mayoorikka
2 years ago
 சிங்கள நடிகை  தமித்தா அபேரத்னவுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட சிங்கள நடிகை தமித்தா அபேரத்ன எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து, சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பான குற்றச்சாட்டு நடிகை தமித்தா அபேரட்னவிற்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தது.

இதன்படி தேடப்பட்டு வந்த அவர், பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சத்தியாகிரக போராட்டத்தின் பின்னர், கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.