காணி தகராறில் ஏற்பட்ட வாதம் நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

Kanimoli
2 years ago
காணி தகராறில் ஏற்பட்ட வாதம் நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

அக்குரஸ்ஸ, மடோல பிரதேசத்தில் நேற்றிரவு (10) நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

காணி தகராறில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, கூரிய ஆயுதத்தால் நபரின் மூத்த சகோதரர் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.