வவுனியா தாண்டிகுளத்தில் தொடருந்துடன் மோதுண்டு உயிரிழந்த நிலையில் சடலமொன்று மீட்பு
Kanimoli
2 years ago
வவுனியா தாண்டிகுளத்தில் இன்று தொடருந்துடன் மோதுண்டு உயிரிழந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை கொழும்பில் இருந்து யாழ் நோக்கிப் பயணித்த தொடருந்திலேயே குறித்த நபர் மோதுண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா ஈஸ்வரிபுரத்தை சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மைக்கல் தினகரன் என்பவரே உயிரிழந்தவராவர்.