இரவு 10 மணிக்கு மேல் கல்லறை போல் காணப்படும் கொழும்பு: சுற்றுலாத்துறை அமைச்சர்

Prathees
2 years ago
இரவு 10 மணிக்கு மேல் கல்லறை போல் காணப்படும் கொழும்பு: சுற்றுலாத்துறை அமைச்சர்

பத்து மணிக்குப் பிறகு கொழும்பு மாநகரம் கல்லறை போல் இருப்பதாகவும் ஒன்றும் இல்லை எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் கொழும்பு நகரில் பணம் செலவழிக்க இடமில்லை எனவும், சுற்றுலா பயணிகளால் பணத்தை செலவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பணத்தை செலவழிப்பதற்காக பொழுதுபோக்கு இடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், சுற்றுலாப்பயணிகள் தங்களுடைய பணத்தை முறையாக செலவழிக்கும் வகையில் நிகழ்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.